search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜஸ்தான் ராயல்ஸ்"

    • முதலில் ஆடிய மும்பை அணி 179 ரன்கள் எடுத்தது.
    • ராஜஸ்தான் அணியின் சந்தீப் ஷர்மா 5 விக்கெட் வீழ்த்தினார்.

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் திலக் வர்மா 65 ரன்னும் வதேரா 49 ரன்களும் எடுத்தனர்.

    ராஜஸ்தான் சார்பில் சந்தீப் ஷர்மா 5 விக்கெட்டும், போல்ட் 2 விக்கெட்டும், சாஹல், ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், மும்பை அணியின் முகமது நபி 23 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் ஐ.பி.எல். வரலாற்றில் சாஹலின் 200-வது விக்கெட்டாக பதிவானது.

    இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை சாஹல் படைத்துள்ளார்.

    • ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • அதிரடியாக விளையாடி ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 65 ரன்னும் வதேரா 49 ரன்களும் குவித்தனர். ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான பட்லர்- ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் குவித்தது. அந்த நிலையில் சாவ்லா பந்து வீச்சில் பட்லர்(35) அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சாம்சன் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினார்.

    ஒரு முனையில் அதிரடியாக விளையாடி ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் ராஜஸ்தான் அணி 18.5 ஓவரில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 104 ரன்னிலும் சாம்சன் 38 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை தரப்பில் சாவ்லா 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

    இந்த தோல்வியின் மூலம் 13-வது ஆண்டாக ஜெய்ப்பூரில் மும்பை அணி தோல்வியை தழுவியுள்ளது. 2012-ம் ஆண்டுக்கு பிறகு ஜெய்ப்பூர் மைதானத்தில் மும்பை - ராஜஸ்தான் அணிகள் மோதிய அனைத்து போட்டிகளிலுமே மும்பை அணி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதியுள்ளன. இந்த போட்டி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் துஷாரா இடம் பிடித்துள்ளார்.

    அதன்படி, மும்மை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதில், அதிகபட்சமாக திலக் வர்மா 65 ரன்களை குவித்தார். தொடர்ந்து, நேஹல் வதேரா 49 ரன்களும், முகமது நபி 23 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 10 ரன்களும் எடுத்தனர்.

    ரோகித் சர்மா 6 ரன்களும், ஹர்திக் பாண்டியா 10 ரன்களும், டிம் டேவித் 3 ரன்களும் எடுத்தனர். இந்நிலையில், மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.

    ராஜஸ்தான் தரப்பில் அபாரமாக பந்து வீசிய சந்தீப் ஷர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதில் கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    இதனால், 180 ரன்கள் வெற்றி இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களத்தில் இறங்குகிறது.

    • 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர்.
    • இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் துஷாரா இடம் பிடித்துள்ளார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் துஷாரா இடம் பிடித்துள்ளார்.

    • ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர்.
    • பயிற்சியை முடித்து கொண்டு மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் ஹோட்டலுக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர். இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் அணி வீரர்கள் பயிற்சி செய்து விட்டு ஓய்வு எடுக்க ஹோட்டலுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் பயிற்சியை முடித்து கொண்டு மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற பஸ் டிராபிக்கிள் சிக்கியது.

    அப்போது அந்த இடத்திற்கு ஹூரோ மாதிரி வந்த சன்னி என்ற ரசிகர் டிராபிக்கை சரி செய்தார். அவரது செயலை பஸ்சில் இருந்து பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் அவருக்கு நன்றியும் தெரிவித்தனர்.

    இந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அந்த வீடியோவில் நன்றி சன்னி பாய் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    • 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றனர்.
    • இந்த போட்டி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்நிலையில் ஜெய்ப்பூர் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ஆண்டுகளாக தோல்வியை சந்தித்து வருகிறது. 2012-ம் ஆண்டுக்கு பிறகு ஜெய்ப்பூர் மைதானத்தில் மும்பை - ராஜஸ்தான் அணிகள் மோதிய அனைத்து போட்டிகளிலுமே மும்பை அணி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது.

    இதனால் இன்றைய போட்டியிலாவது மும்பை அணி வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ, குஜராத் அணிகள் தலா நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடம் வகிக்கிறது.

    ஐபிஎல் தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் ஆர்சிபி-யை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீழ்த்தியிருந்தது. 2-வது போட்டியில் பஞ்சாப் அணியை குஜராத் டைட்டன்ஸ் வீழ்த்தியிருந்தது.

    ஆர்சிபி-யை வீழ்த்தியன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா 7 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று 2-வது இடம் வகிக்கிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ஏழு போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ரன்ரேட் அடிப்படையில் கொல்கத்தாவிற்கு அடுத்த இடமான 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏழு போட்டிகளில் ஆறில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ, குஜராத் அணிகள் தலா நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ரன்ரேட் அடிப்படையில் சிஎஸ்கே (ரன்ரேட்= +0.529), லக்னோ (ரன்ரேட்= +0.123), குஜராத் (ரன்ரேட்= -1.055) அணிகள் முறையே 4 முதல் 6 இடங்களை பிடித்துள்ளன.

    மும்பை 3 வெற்றிகள் மூலம் (ரன்ரேட்= -0.133) 7-வது இடத்தையும், டெல்லி 3 வெற்றிகள் மூலம் (ரன்ரேட்= -0.477) 8-வது இடத்தையும், பஞ்சாப் அணி 2 வெற்றிகள் மூலம் 9-வது இடத்தையும் பிடித்துள்ளன. ஆர்சிபி 8 போட்டிகளில் விளையாடி ஒரேயொரு வெற்றி மூலம் கடைசி இடததை பிடித்துள்ளது.

    • நேற்று நடைபெற்ற கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சுனில் நரைன் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்
    • இதன் மூலம் 16 வருடங்கள் கழித்து கொல்கத்தா அணிக்காக சதமடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனை அவர் படைத்தார்

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகள் மோதின. அதில், கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுனில் நரைன் 109 ரன்கள் குவித்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான், குல்தீப் சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை விழ்த்தினர்.

    இதனை தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தன் அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக 107 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த போட்டியில் சதம் அடித்த சுனில் நரைன் பல சாதனைகளை படைத்துள்ளார். 16 வருடங்கள் கழித்து கொல்கத்தா அணிக்காக சதமடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனை அவர் படைத்தார். மொத்தமாக கொல்கத்தா அணிக்காக சதம் அடித்தவர்களில் மெக்கல்லம் (2008-ம் ஆண்டு) முதல் இடத்திலும் வெங்கடேஷ் ஐயர் (2023-ம் ஆண்டு) 2-வது இடத்திலும் உள்ளார். அவர்களுக்கு அடுத்தப்படியாக சுனில் நரைன் உள்ளார். மேலும் சதம் மற்றும் விக்கெட் எடுத்த ஐபிஎல் வீரர்கள் பட்டியலில் சுனில் நரைன் இடம் பிடித்துள்ளார்.

    இதன் மூலம் பகுதி நேர பேட்ஸ்மேனான சுனில் நரேன் இந்த சீசனில் விராட் கோலி (361), ரியன் பாராக (284) ஆகியோருக்குப் பின் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 3வது இடம் பிடித்து ஆரஞ்சு தொப்பியை நெருங்கி வருகிறார்.

    இந்நிலையில் தம்முடைய முதல் சதத்திற்கும் ஓப்பனிங்கில் சிறப்பாக விளையாடுவது குறித்தும் சுனில் நரேன் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "ஐபிஎல் துவங்குவதற்கு முன்பாக நீங்கள் ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கு போட்டியிடுவீர்கள் என்று யாராவது என்னிடம் கூறியிருந்தால் அதை நான் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டிருப்பேன். ஏனெனில் நான் நீண்ட காலமாக ஓப்பனிங்கில் விளையாடவில்லை. இருப்பினும் அணிக்கு மீண்டும் வந்துள்ள கௌதம் கம்பீர் எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்தார்.

    இந்த தொடரில் துவக்க வீரராக விளையாடும் வாய்ப்பை கொடுப்பதற்கான உறுதியையும் கம்பீர் எனக்கு கொடுத்தார். எனவே 14 போட்டிகளிலும் என்னுடைய அணிக்காக முடிந்தளவுக்கு சிறந்த துவக்கத்தை நான் கொடுக்க விரும்புகிறேன். அணிக்கு நல்ல துவக்கத்தை கொடுப்பதே என்னுடைய வேலையாகும்" என்று கூறினார்.

    • 9-வது விக்கெட்டுக்கு பட்லர்- ஆவேஷ் கான் ஜோடி 38 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
    • இதில் ஆவேஷ் கான் 0 ரன் எடுத்திருந்தார்.

    கொல்கத்தா:

    ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான்- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 223 ரன்கள் குவித்தது.

    இதனை தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 20-வது ஓவர் கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக பட்லர் கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றிபெற வைத்து சாதித்தார். அவர் 60 பந்துகளில் 107 ரன் எடுத்தார். இதில் 9 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.

    ராஜஸ்தான் அணி 186 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது பட்லருடன் ஆவேஷ் கான் ஜோடி சேர்ந்தார். இறுதிவரை களத்தில் இருந்த ஆவேஷ் கான் ஒரு பந்து கூட சந்திக்காமல் கடைசி வரை களத்தில் அவுட் ஆகாமல் இருந்தார். ஆவேஷ்கானை பேட்டிங் செய்யாதவாறு பட்லர் பார்த்துக் கொண்டு ஆடினார்.

    9-வது விக்கெட்டுக்கு இவர்களது பார்ட்னர்ஷிப் 38 ரன்கள் ஆகும். இதில் ஆவேஷ் கான் 0 ரன் எடுத்திருந்தார்.

    இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு ஓய்வு அறைக்கு வீரர்கள் சென்றனர். அந்த வகையில் ஆவேஷ் கானுக்கு சென்றார். அப்போது அவருக்கு ராஜஸ்தான் அணி சார்பில் மாஸ் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • தனி ஒருவராக கடைசி வரை போராடி சாதனை வெற்றியை பெற வைத்தார்.
    • ஒட்டுமொத்த 20 ஒவரில் பட்லருக்கு 8-வது சதமாகும்.

    கொல்கத்தா:

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஜோஸ் பட்லரின் அதிரடியான ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக பட்லர் களம் இறங்கினார். இங்கிலாந்தை சேர்ந்த அவர் கடைசி வரை களத்தில் தனி நபராக நின்று அணியை வெற்றிபெற வைத்து சாதித்தார். அவர் 60 பந்துகளில் 107 ரன் எடுத்தார். இதில் 9 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.

    தொடக்கத்தில் மெதுவாக பட்லர் விளையாடினார். முதல் 6 ஓவரில் 12 பந்துகளில் 20 ரன்களை மட்டுமே எடுத்தார். 7 முதல் 14-வது ஓவர்கள் வரையில் 21 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். கடைசி 6 ஓவர்களில் 27 பந்துகளை எதிர்கொண்டு 65 ரன்கள் குவித்தார்.

    ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் தன்னை நிலைப்படுத்தி கொண்டு அதே நேரத்தில் அதிரடியையும் வெளிப்படுத்தினார். கடைசி 3 ஓவர்களில் பட்லர் ஸ்டிரைக்கை தக்க வைத்துக் கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    மறுமுனையில் இருந்த ஆவேஷ்கானை பேட்டிங் செய்யாதவாறு பார்த்துக் கொண்டு புத்தி சாலித்தனமாக ஆடினார். தனி ஒருவராக கடைசி வரை போராடி சாதனை வெற்றியை பெற வைத்தார்.

    ஐ.பி.எல். போட்டியில் பட்லர் தனது 7-வது சதத்தை பதிவு செய்தார். இந்த தொடரில் அவரது 2-வது சென்சுரி ஆகும் ஐ.பி.எல்.லில் அதிக சதம் அடித்த வீரர்களில் பட்லர் 2-வது இடத்தில் உள்ளார். கோலி 8 சென்சுரியுடன் முதல் இடத்திலும் கிறிஸ் கெய்ல் 6 சதத்துடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    ஒட்டுமொத்த 20 ஒவரில் பட்லருக்கு 8-வது சதமாகும். அவர் கிறிஸ் கெய்ல் (22 சதம்), பாபர் ஆசம் (11), விராட்கோலி (9), ஆகியோருக்கு அடுத்தப்படியாக உள்ளார்.

    கடைசி 6 ஓவரில் ராஜஸ்தான் 96 ரன் எடுத்தது. இதுவும் சாதனையாகும். இதற்கு முன்பு 2020-ம் ஆண்டு அந்த அணி பஞ்சாப்புக்கு எதிராக கடைசி 6 ஓவரில் 92 ரன் எடுத்தது.

    இதே போல கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சுனில் நரைனும் சதம் அடித்து சாதனை புரிந்தார். ஆனால் அது பலன் இல்லாமல் போய் விட்டது.

    • ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சுனில் நரைன் சதம் அடித்து அசத்தினார்.
    • கொல்கத்தா அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுனில் நரேன் 109 ரன்கள் குவித்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான், குல்தீப் சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை விழ்த்தினர்.

    இதனை தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தன் அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக 107 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த போட்டியில் சதம் அடித்த சுனில் நரைன் பல சாதனைகளை படைத்துள்ளார். 16 வருடங்கள் கழித்து கொல்கத்தா அணிக்காக சதமடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனை அவர் படைத்தார். மொத்தமாக கொல்கத்தா அணிக்காக சதம் அடித்தவர்களில் மெக்கல்லம் (2008-ம் ஆண்டு) முதல் இடத்திலும் வெங்கடேஷ் ஐயர் (2023-ம் ஆண்டு) 2-வது இடத்திலும் உள்ளார். அவர்களுக்கு அடுத்தப்படியாக சுனில் நரைன் உல்ளார். மேலும் சதம் மற்றும் விக்கெட் எடுத்த ஐபிஎல் வீரர்கள் பட்டியலில் சுனில் நரைன் இடம் பிடித்துள்ளார்.

    அந்த பட்டியல்:-

    107 & 3/21 - கிறிஸ் கெய்ல் (ஆர்சிபி) எதிராக பஞ்சாப், பெங்களூரு, 2011

    175* & 2/5 - கிறிஸ் கெய்ல் (ஆர்சிபி) எதிராக புனே, பெங்களூரு, 2013

    104* & 2/38 - ஷேன் வாட்சன் (ஆர்ஆர்) எதிராக கேகேஆர், பிரபோர்ன், 2015

    106 & 1/13 - ஷேன் வாட்சன் (சிஎஸ்கே) எதிராக ஆர்ஆர், புனே, 2018

    109 & 2/30 - சுனில் நரைன் (கேகேஆர்) எதிராக ஆர்ஆர், கொல்கத்தா, 2024

    • முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்தது.
    • கடைசி பந்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய 31-வது லீக் போட்டியில் கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுனில் நரேன் 109 ரன்கள் குவித்தார். இதில் 13 பவுண்டரியும் 6 சிக்சரும் அடங்கும்.

    அதைத் தொடர்ந்து 224 என்ற கடினமான இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஜெய்ஸ்வால் 19 (9) ரன்னில் அவுட்டாகினார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

    அதனை தொடர்ந்து பட்லர் -ரியான் பராக் ஜோடி அதிரடியாக விளையாடி 3-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்து. அதிரடியாக விளையாடி ரியான் பராக் 34 ரன்களில் அவுட்டாகினார். அடுத்ததாக வந்த துருவ் ஜுரேல் 2, ரவிச்சந்திரன் அஸ்வின் 8, சிம்ரோன் ஹெட்மயர் 0, ரோவ்மன் போவல் 26, ரன்களில் அவுட்டாகினர்.

    இருப்பினும் தொடர்ந்து ஒற்றை ஆளாக நின்ற பட்லர் கொல்கத்தா பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட அபாரமான சதமடித்து 9 பவுண்டரி 6 சிக்சருடன் 107* (60) ரன்கள் விளாசி கடைசி பந்தில் ராஜஸ்தானை 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.

    இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை (224) வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற தங்களுடைய சொந்த சாதனையை ராஜஸ்தான் அணி சமன் செய்தது. இதற்கு முன் 2020 சீசனில் பஞ்சாப்புக்கு எதிராக 224 ரன்களை சேசிங் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×